G.C.E O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
G.C.E O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு..!

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி சீட்டு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார். 

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிச் சீட்டு நாளை முதல் விநியோகிக்கப்படும். 

ஊரங்கு சட்டம் நாட்டில் பிறப்பிக்கப்பட்டமையால் கடந்த சில தினங்களாக அனுமதிச் சீட்டு விநியோகத்தில் தாமத நிலை ஏற்பட்டது.

 எனினும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவை கிடைக்கும் என நம்புகிறோம். இல்லை என்றால் திங்கட்கிழமைக்குள் 

சகல நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு