நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது..! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது..! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை (12) காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு