நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் இன்று இரவு 7 மணி தொடக்கம் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிவரை அமுலில் இருக்கும். என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருக்கின்றது. 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி 

பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு