நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி! மின் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கியது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி! மின் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கியது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு இலங்கை மின்சாரசபை விடுத்திருந்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

நேற்றய தினம் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை கூறியுள்ளார். 

இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, 

உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு