சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழவதும் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதன்படி நாளை சனிக்கிழமை இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி  A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி நேரம் வரை ஒரு மணித்தியால மின்வெட்டும்

 இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு