எனது ஒரு வருட சம்பளத்தை கைவிடுகிறேன்..! ஹரீன் பெர்னாண்டோ எழுத்துமூலம் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
எனது ஒரு வருட சம்பளத்தை கைவிடுகிறேன்..! ஹரீன் பெர்னாண்டோ எழுத்துமூலம் அறிவிப்பு...

தனது ஒரு வருடத்திற்கான சம்பளத்தை கைவிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் வழங்கியுள்ளார்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கடமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஒரு வருடத்துக்கு நான் எனது பாராளுமன்ற சம்பளத்தை எடுக்க மாட்டேன் மற்றும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எமது பொருளாதாரம் மற்றும் நாட்டின் சுமையைக் குறைக்க இந்தக் கடினமான காலங்களில் அரசாங்க ஊழியர்களாகிய நாம் முடிந்ததைச் செய்ய வேண்டும் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு