ஆட்சி மாற்றமே மக்களின் தேவையாகும்..! மக்களின் எதிர்பார்ப்பு நாடாளுமன்றில் ஒலிக்கவேண்டும்...

ஆசிரியர் - Editor I
ஆட்சி மாற்றமே மக்களின் தேவையாகும்..! மக்களின் எதிர்பார்ப்பு நாடாளுமன்றில் ஒலிக்கவேண்டும்...

நாட்டு மக்களின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என கூறியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ, ஆட்சி மாற்றமே மக்களின் தேவை எனவும் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் குரல் பாராளுமன்றத்திலும் எதிரொலிக்க வேண்டுமெனவும் ஆட்சிமாற்றம் தேவை என்பதே மக்களின் கோரிக்கையாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்பதில்லை எனவும் மக்களின் ஆசிர்வாதத்துடனேயே ஆட்சியை பெறுப்பேற்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை இந்த வாரத்திற்குள் சபையில் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு