முன்னாள் அமைச்சரின் வீட்டை அடித்து நொருக்கிய மக்கள்..! வீட்டை மீட்க பொலிஸார் கண்ணீர்குண்டு பிரயோகம், ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் அமைச்சரின் வீட்டை அடித்து நொருக்கிய மக்கள்..! வீட்டை மீட்க பொலிஸார் கண்ணீர்குண்டு பிரயோகம், ஒருவர் காயம்..

பொலன்னறுவையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் கண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றியுள்ளனர். 

நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொலன்னறுவையில் உள்ள முன்னாள் அமைக்கர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டினை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். 

இந்நிலையில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த மக்கள் வீட்டுக்குள் நுழைந்த பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர். இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு