அடுத்த சில மணிநேரங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக்கூடும்..! கொழும்பு ஊடகங்கள் ஆரூடம்...

ஆசிரியர் - Editor I
அடுத்த சில மணிநேரங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக்கூடும்..! கொழும்பு ஊடகங்கள் ஆரூடம்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகும் தீர்மானத்தை அறிவிக்ககூடும் என கொழும்பை தளமாக கொண்டியங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.

11 கட்சிகளின் சந்திப்பை தொடர்ந்து அந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்  சம்மதம் தெரிவித்துள்ளனர், இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தினேஸ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவிற்கு பதிலாக புதிய நிதியமைச்சராக ஹர்சா டி சில்வா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு