நாடு முழுவதும் இன்று 7 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்று 7 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு...

நாடு முழுவதும் இன்றைய தினம் சுமார் 7 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி, A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டும், 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன், B தொடக்கம் W வரையான வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது. 

மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு