நாடு முழுவதும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு இன்றும் தொடரும்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு இன்றும் தொடரும்..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், 

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், 

மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு