இன்றும் தொடரும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் தொடரும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலமும், 

மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில் மாலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலமும் 

மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு