இன்றும் மின்வெட்டு அமுல்..! இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் மின்வெட்டு அமுல்..! இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்ப்படுத்த மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், 

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், 

5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு