இன்றும் சூழற்சி முறையில் மின்வெட்டு அமுல்..! இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் சூழற்சி முறையில் மின்வெட்டு அமுல்..! இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்று 7.30 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்திருக்கின்றது. 

இதன்படி இன்று திங்கள் கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், 

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், 

மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு