கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் கடத்தல்! யாழ்.அரியாலை சுற்றிவளைப்பில் கடத்தல்காரி கைது..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் கடத்தல்! யாழ்.அரியாலை சுற்றிவளைப்பில் கடத்தல்காரி கைது..

ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திவந்து விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பெருமளவு போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பயணிகள் பேருந்துகளை பயன்படுத்தி சூட்சுமமானமுறையில் போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்திவந்த யாழ்ப்பாணத்திலுள்ள தரகர்களுக்கு விற்பனை செய்வதை பல நாட்களாக செய்துவந்துள்ளார். 

குறித்த தகவல் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லியனகேவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவருடைய வழிகாட்டலில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்ஸிஸ்

தலைமையிலான பொலிஸ் பிரிவு யாழ்.அரியாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தி குறித்த பெண்ணை போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது குறித்த பெண்ணிடம் 

5 லட்சம் தொடக்கம் 6 லட்சம் பெறுமதியான போதைப் பொருட்கள் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு