12 வயது சிறுமியின் வாயில் துப்பாக்கி சூடு..! 21 வயதான இளைஞன் கைது..

12 வயதான சிறுமியின் வாயில் துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் ஹப்புத்தளை - கெலிப்பனவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் குறித்த சிறுமி சுடப்பட்டதோடு, கொஸ்லந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.