இந்த கதைகளை கொண்டை கட்டிய சீனர்களிடம் சொல்லும்..! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கர்தினால் பதில்..

ஆசிரியர் - Editor I
இந்த கதைகளை கொண்டை கட்டிய சீனர்களிடம் சொல்லும்..! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கர்தினால் பதில்..

பொலிஸ் அமைச்சர் எங்களுக்கு கூறும் கதைகளை கொண்டை கட்டிய சீனர்களிடம் சொல்லட்டும். என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சாடியுள்ளார். 

பொரளை தேவாலயத்தில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு கருத்து தொிவித்திருந்தார். அந்த கருத்திற்கே பேராயர் பதில் கூறும்போது மேற்கண்டவாறு சாடியுள்ளார். 

பேராயர் மேலும் கூறியுள்ளதாவது, இந்த சம்பவம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொலிஸார் பொதுவாக தாங்களுக்கு எது தேவையோ அதனையே வாக்கு மூலமாக பதிவு செய்து கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது அமைச்சரின் எதிர்வினையின் ஊடாக தெளிவாக தெரிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அமைச்சர் நேர்மையானவர் என்றால் சாம் முன்வைத்த சாட்சிகள் குறித்து விசாரணை செய்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது எனவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமொன்றை நிரூபிப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அமைச்சர் எமக்கு கூறும் கதைகளை கொண்டை கட்டிய சீனர்களிடம் சொல்லட்டும், இவ்வாறான அமைச்சர்களிடம் நீதி நேர்மையை எதிர்பார்க்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு