யாழ்.நெடுந்தீவு உள்ளிட்ட 3 தீவுகளை இந்தியாவுக்கு வழங்க அரசு தீவிர முயற்சி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு உள்ளிட்ட 3 தீவுகளை இந்தியாவுக்கு வழங்க அரசு தீவிர முயற்சி..!

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட 3 தீவுகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக எதிர்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

மேலும் இந்தியாவுடன் பேணப்பட்டுவரும் தொடர்புகளால் சந்தேகமடைந்திருக்கும் சீனா கடந்த 10 வருடகாலத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்ய விசேட குழுவொன்றை நியமித்ததாகவும் கூறியுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் 

கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா மேற்கண்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்போது வடக்கில் மூன்று தீவுகளை 

இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அவற்றில் நெடுந்தீவும் உள்ளடங்குகின்றது. நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது 

நாட்டில் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குதிரைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். குறிப்பாக நெடுந்தீவில் மிகவும் உயரமாகக் காணப்பட்ட குதிரைகள், 

காலநிலை உள்ளடங்கலாக காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உயரம் குறைந்தவையாக மாறிவிட்டன. எனவே வனஜீவராசிகள் சட்டத்தின் ஊடாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன. 

அவ்வாறிருக்கையில் அந்தத் தீவை எவ்வாறு பிறிதொரு நாட்டிற்கு வழங்கமுடியும்? எனவே இவ்விடயத்தில் சூழலியலாளர்கள் தலையீடு செய்யவேண்டியது அவசியமாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு