பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 2022 ஜனவரி 3ம் திகதி தொடக்கம் நியமனம்..

ஆசிரியர் - Editor I
பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 2022 ஜனவரி 3ம் திகதி தொடக்கம் நியமனம்..

நாட்டில் 51 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அலுவலர்களாக இக்குழுவினர் நியமிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓராண்டு பயிற்சி முடித்த 42,500 பேருக்கு முதலில் நியமனம் வழங்கப்படும் எனவும் மீதமுள்ளவர்கள் ஓராண்டு பயிற்சி முடித்த பின்னர் 

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு