SuperTopAds

பொலிஸ் உத்தியோகஸ்த்தரை வீதியில் 70 மீற்றர் துாரம் இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி கைது! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகஸ்த்தரை வீதியில் 70 மீற்றர் துாரம் இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி கைது! பொலிஸ் உத்தியோகஸ்த்தர் படுகாயம்..

வாகனம் நிறுத்த தடைவிதிக்கப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்தியமை தொடர்பாக வினவிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்த்தரை சுமார் 70 மீற்றர் துாரத்திற்கு இழுத்துச் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வினவியபோது 

அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பின்புறமாக இழுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். 

எனினும் ஓட்டுனர் பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். ஆனால் சுமார் எழுபது மீற்றர் சென்ற பின் குறித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதிக் கவிழ்ந்தது.

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.