கொழும்பிலிருந்து - யாழ்ப்பாணம் நோக்கிவந்த சொகுசு பேருந்து விபத்து! ஒருவர் பலி, பலர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மதவாச்சி - இகிரிகொலாவ இடையிலான 145வது மைல் கல்லில் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

காயமடைந்தவர்கள்  ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு