நாட்டை முடக்குவதும், முடக்காமல் இருப்பதும் மக்களின் கைகளில் உள்ளது! ஒமிக்ரோன் பரவல் குறித்து இராணுவ தளபதி தொிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்குவதும், முடக்காமல் இருப்பதும் மக்களின் கைகளில் உள்ளது! ஒமிக்ரோன் பரவல் குறித்து இராணுவ தளபதி தொிவிப்பு...

ஆபத்தான கொரோனா திரிபாக கருதப்படும் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள. நாடு மீண்டும் முடக்கத்துக்கு செல்லாதிருப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. 

மேற்கண்டவாறு தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்தபோது 

அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். புதிய மாறுபாடுகள் தொடர்பாக நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். முழுமையான பகுப்பாய்வுகளின் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில்

அறிவிக்கப்படும் எனவும், நாடு மீண்டும் முடக்க நிலைக்குச் செல்லாதிருப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றவேண்டும் எனவும் இராணுவ தளபதி கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு