க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கொரோனா அபாயம் காரணமாக முடக்கப்பட்ட க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க இன்று அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  50 சதவீத திறனில் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (16) முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

என்றும் வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு