முகம் வீக்கமடைந்த நிலையில் இரு பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி! தடுப்பூசி பெற்று வீடு திரும்பியபோது ஓவ்வாமை..

ஆசிரியர் - Editor I
முகம் வீக்கமடைந்த நிலையில் இரு பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி! தடுப்பூசி பெற்று வீடு திரும்பியபோது ஓவ்வாமை..

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.தென்மராட்சியை சேர்ந்த 3 பெண்களும் தடுப்பூசி பெற்றுக்கொண்டு,

பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் இருவருக்கு முகம் வீக்கமடைந்துள்ளதாகவும், 

அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதானா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு