தீப்பற்றி எரிந்த பாடசாலை!! -20 சிறுவர்கள் உடல் கருகிப் பலி-

ஆசிரியர் - Editor II
தீப்பற்றி எரிந்த பாடசாலை!! -20 சிறுவர்கள் உடல் கருகிப் பலி-

நைஜீரியா நாட்டில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 20 சிறுவர்கள் உடல் கருவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

அந்நாட்டின் தலைநகர் நியாமியில் உள்ள குறித்த பாடசாலை கட்டடங்கள் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட குடிசைக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ,ங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென வைக்கோலால் வேயப்பட்ட வகுப்பறைக்கள் தீப்பற்றி எரிந்தன.

தீ வேகமாக பரவியதால் பல மாணவர்கள் தப்பியோட முடியாது வகுப்பறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு படையினர் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அதற்கிடையில் தீயில் கருகி 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிக காற்றே இந்தத் தீப்பரவைலுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு