சித்திரை புத்தாண்டு காலத்தில் பயண கட்டுப்பாடு..! கொள்ளைரீதியான தீர்மானம் எடுக்க தவறினால் நாடு பேரழிவை சந்திக்கும், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
சித்திரை புத்தாண்டு காலத்தில் பயண கட்டுப்பாடு..! கொள்ளைரீதியான தீர்மானம் எடுக்க தவறினால் நாடு பேரழிவை சந்திக்கும், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை வரவிருக்கும் நிலையில் பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் கொள்கைரீதியான தீர்மானத்தை அரசு எடுக்காவிடின் 3வது அலை உருவாகும். என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கருத்து தொிவிக்கையில், பயண கட்டுப்பாடு விதிக்கும் கொள்கைரீதியான தீர்மானத்தை அரசு எடுக்க தவறினால் மே மற்றும் ஜீன் மாதத்தற்குள் கொரோனா 3ம் அலை உருவாகும். 

அதனால் நாடு இதுவரை சந்தித்த பேரழிவுகளை காட்டிலும் பாரிய பேரழிவு ஏற்படும். எனவும் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் தற்போதைய நிலமை குறித்து அரசும் மக்களும் உரிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு