இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..! யாழ்.மாநகர முதல்வர் மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகளுடன் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்..! யாழ்.மாநகர முதல்வர் மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகளுடன் சந்திப்பு..

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். 

இந்த விஜயத்தின்போது நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகர் வழிபாடுகளை நடத்தியதுடன், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து பேசினார். 

மேலும் இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இன் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் யாழ்.இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு