வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணை அச்சுறுத்தி கொள்ளை..! பருத்துறை - புற்றளையில் பகலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணை அச்சுறுத்தி கொள்ளை..! பருத்துறை - புற்றளையில் பகலில் சம்பவம்..

யாழ்.பருத்துறை - புற்றளை பகுதியில் நேற்று மாலை 6.45 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் கத்திமுனையில் பெண்ணின் தாலி கொடியை அறுத்து சென்றுள்ளனர். 

மகா சிவராத்திரியையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோயிலுக்குச் சென்ற நிலையில் நேற்று மாலை 6:45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

புற்றளையில் வசிக்கும் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

முகத்தை மறைத்து முகமூடி அணிந்து கத்தியோடு உள்நுழைந்த இருவரைக்கண்டதும், வீட்டில் இருந்த அதிபரின் மனைவியும் இரு மகள்மாரும் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, 

அதிபரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு