யாழ்.நெல்லியடியை சேர்ந்த நபர் யாழ்.நகரில் கைது..! 4 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன்..
யாழ்.நகரில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரே
இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.