யாழ்.மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 23 பேருடைய விபரம் வெளியானது..! காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் 8 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 23 பேருடைய விபரம் வெளியானது..! காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் 8 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாகாண சுகாதார சேவைகளபணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறுகையில், காரைநகர் பகுதியில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் 8 பேரும் காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்களாவர். மேலும் ஊர்காவற்றுறை பகுதியில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த 9 பேரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளனவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் யாழ்.போதனா வைத்திய சாலை சிற்றூழியர் ஒருவர், மேலும் உடுவில் பிரதேசத்தில் 2 பேர், கோப்பாய் ஒருவர்,

யாழ்.நகரம் ஒருவர் உட்பட 23 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு