திடீர் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் சாவு!! -மேலும் பலர் காயம்: ஆப்கானிஸ்தானில் அவலம்-

ஆசிரியர் - Editor II
திடீர் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் சாவு!! -மேலும் பலர் காயம்: ஆப்கானிஸ்தானில் அவலம்-

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள படாக்ஸ்தான் மாகாணம் ராகிஸ்தான் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜரந்தாப் என்ற கிராமத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை அடிவாரத்தில் இருந்த கிராம மக்கள் பலர் இந்த பனிச்சரிவில் சிக்கி கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். இருப்பினும் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு