இரத்த வெள்ளமாக மாறிய மியான்மார்!! -வீதிகளில் சடலங்களை இழுத்து செல்லும் இராணுவம்-

ஆசிரியர் - Editor II
இரத்த வெள்ளமாக மாறிய மியான்மார்!! -வீதிகளில் சடலங்களை இழுத்து செல்லும் இராணுவம்-

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் கொலைகள் மற்றும் பாரிய அடக்குமுறைகளை தாண்டியும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. 

அங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்பு போராட்டத்தில் இதுவரை 50ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

குறிப்பாக அங்கு ஒரு நாளில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் யாங்கூன் உட்பட பல நகரங்களில் வீதிகள் இரத்த வெள்ளத்தில் காட்சியளிக்கின்றன. இந்த படுகொலைகள் தொடர்பிலும், இராணுவத்தின் மிருகத்தனமான செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்களை வெளி கொண்டு வர முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் சடலங்களை இராணுவத்தினர் இழுத்து செல்லும் காட்சியை மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன. இரக்கமற்ற முறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு