உணவகத்தில் மனித இறைச்சி உணவு விற்பனை!! -சமைத்த பெண்ணை கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
உணவகத்தில் மனித இறைச்சி உணவு விற்பனை!! -சமைத்த பெண்ணை கைது செய்த பொலிஸ்-

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டின் அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள  உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலக அளவில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரியா உள்ளது. இந்தநிலையில் குறித்த உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

திடீரென பொலிஸார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை பொலிஸார் வெளியிடவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு