மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்!! -ஓரு நாளில் 38 பேர் சுட்டுப் படுகொலை-

ஆசிரியர் - Editor II
மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்!! -ஓரு நாளில் 38 பேர் சுட்டுப் படுகொலை-

மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நேற்று புதன்கிழமை மட்டும் 38 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலுயுறுத்தியும் யாங்கோன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் போது 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு