தாயையும், குழந்தையையும் சட்ட வைத்திய அதிகாரி அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெறுமாறு யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
தாயையும், குழந்தையையும் சட்ட வைத்திய அதிகாரி அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெறுமாறு யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவு..

பச்சிளம் குழந்தையை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட குழந்தையின் தயாரை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி மனநலம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்பிக்கும்படி யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

அத்துடன், குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெறுவதற்கு வசதியாக இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் மன்று உத்தரவிட்டது. 8 மாதங்கள் நிரம்பிய பச்சிளம் குழந்தையை 

தாயார் அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளுடன் காணொலிப் பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு பரவியது. அதனையடுத்து நல்லூர் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் இணைந்து 

துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தையை இன்று காலை மீட்டனர்.அத்துடன் குழந்தையை துன்புறுத்திய தாயாரைக் கைது செய்த பொலிஸார், வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

ம்பவம் தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதிவான், தாயாரையும் குழந்தையும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்த வசதியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்க உத்தரவிட்டார். அத்துடன், தாயாரின் மனநிலை தொடர்பில் 

சட்ட வைத்திய அதிகாரி ஊடாக உளநல மருத்துவ வல்லுநரிடம் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துமாறும் நீதின்றம் உத்தரவிட்டது.திருகோமலையைச் சேர்ந்த 24 வயதான பெண், கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் 

யாழ்.மணியந்தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு