குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்!! -3 பேர் சம்பவ இடத்திலேயே பலி-

ஆசிரியர் - Editor II
குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்!! -3 பேர் சம்பவ இடத்திலேயே பலி-

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது சில நிமிடங்களிலேயே விழுந்து நொருக்கியுள்ளது. 

புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.‌

கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானி விமான நிலையம் அருகேயுள்ள சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார்.‌ ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.‌

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியாத நிலையில் மேலதிக விசாரணை நடந்து வருகிறது.‌


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு