மியான்மரில் இராணுவம் கோர முகத்தை காட்ட தொடங்கியது!! -இன்றைய போராட்டத்தில் இருவர் சுட்டுக் கொலை: பலர் காயம்-

ஆசிரியர் - Editor II
மியான்மரில் இராணுவம் கோர முகத்தை காட்ட தொடங்கியது!! -இன்றைய போராட்டத்தில் இருவர் சுட்டுக் கொலை: பலர் காயம்-

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 

அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் போராட்டக்காரர்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகமாக மிஸ்ஸிமா செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் அதிர் ஒருவர் மார்பில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் ஆபத்தான காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அந்நாட்டின் தெற்கு பகுதியான டேவி நகரில் போராட்டக்காரர்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு