அம்பாறை காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

ஆசிரியர் - Editor III
அம்பாறை காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை  அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலை பகுதியில் உள்ள  காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக தற்போது  மாற்றப்பட்டு வருகிறது.

காரைதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி  முதற்கட்டமாக இருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது

இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனங்கள் ,போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாகவும் பாதசாரிகளின் நலன் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியினூடாக பயணம் செய்பவர்களை மிக அவதானத்துடன் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை பாதாதை மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு