300 ற்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தல்!! -நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம்-

ஆசிரியர் - Editor II
300 ற்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தல்!! -நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம்-

நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் அங்கு 300 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். 

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சம்ஃபரா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பாடசாலைக்கு அருகே அமைந்துள்ளது. 

குறித்த விடுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் குழுவினர் அங்கு தங்கி இருந்த மாணவிகள் 300 ற்க்கும் மேற்பட்டோரை கடத்திச்சென்றுள்ளனர்.

மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தை சம்ஃபரா மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் ஜிலானி பப்பா உறுதி செய்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு