அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளபோதும் நிதி மாவட்ட செயலகத்தை வந்தடையவில்லை..! மாவட்ட செயலர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளபோதும் நிதி மாவட்ட செயலகத்தை வந்தடையவில்லை..! மாவட்ட செயலர் விளக்கம்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டின் இறுதியில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் நிதி மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை. 

என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட 

வாழை செய்கையாளர்கள் மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகளாக 25.77மில் விவசாய அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த 2020 வருட இறுதியில் இழப்புகள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்ட நிலையில் 

துரதிஷ்டவசமாக இவ்வருடம் 2021 முதல் பகுதியில் இழப்பீட்டு நிதியினை பெறமுடியாத நிலை ஏற்பட்டது .ஆகவே வங்கி கணக்குகள் சமர்ப்பித்த பயனாளிகளுக்கு சமர்ப்பித்த பயனாளிகளுக்கு விரைவில் குறித்த நிதியை பெறுவதற்கு 

நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு