வயோதிப பெண்ணை குரூரமாக தாக்கி நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது..! யாழ்.ஊர்காவற்றுறை - சரவணையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண்ணை குரூரமாக தாக்கி நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது..! யாழ்.ஊர்காவற்றுறை - சரவணையில் சம்பவம்..

யாழ்.ஊர்காவற்றுறை - சரவணை பகுதியில் வயோதிப பெண்கை மூர்க்கத்தனமாக தாக்கி அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கிளிநொச்சி, மானிப்பாயைச் சேர்ந்த இருவரே நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிட்ட நகை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், அலைபேசி ஒன்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு