கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை: 90 வீத துல்லிய முடிவு!! -பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை: 90 வீத துல்லிய முடிவு!! -பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தகவல்-

பிரான்சில் கைத்தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனையில் 90 வீத துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

அந்நாட்டில் கைத்தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை அறிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 வீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை செல்போனில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டமாக 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு