பாக்தாத் நகரில் இரட்டை குண்டு தாக்குதல்!! -28 பேர் பலி, 73 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
பாக்தாத் நகரில் இரட்டை குண்டு தாக்குதல்!! -28 பேர் பலி, 73 பேர் காயம்-

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 73 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பாக்தாத்தில் உள்ள பாப் அல்-சர்கி மார்க்கெட் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கரவாதிகள்  நடத்திய இரட்டை  தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். 28 பேர் கொல்லப்பட்டனர். 73 பேர் படு காயமடைந்தனர், இவ்வாறு காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு