கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு இலட்சம்!! -ஜோ பைடனின் புதிய திட்டம்-

ஆசிரியர் - Editor II
கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு இலட்சம்!! -ஜோ பைடனின் புதிய திட்டம்-

கொரோனா வைரஸ் பாதிப்புக்களை அடுத்து ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டமிட்டு உள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. 

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். 

இந்த திட்டத்துக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (சுமார் ஒரு இலட்சம் ரூபா) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்‌.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு