நாய் போல் கணவரை சங்கிலி கட்டி வீதியில் இழுத்துச் சென்ற கொடூர மனைவி!!

ஆசிரியர் - Editor II

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலால் 4 வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கியூபெக் நகரின் செர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த பொலிஸார் குறித்த பெண்ணை மறித்து விசாரித்துள்ளனர். 

இதன் போது அவர் தான் தனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று கூலாக பதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு இலங்கை மதிப்பில் 9 இலட்சத்திற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு