கொரோனா தொற்று நீக்கியை போதைக்காக குடித்த குடிகாரர்கள்!! -ஒரு பெண் உட்பட 6 பேர் சாவு: 2 பெண்களுக்கு கோமா-

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்று நீக்கியை போதைக்காக குடித்த குடிகாரர்கள்!! -ஒரு பெண் உட்பட 6 பேர் சாவு: 2 பெண்களுக்கு கோமா-

ரஷ்யா நாட்டின் யக்குதியா - டொம்டோர் பகுதியில் ஆண், பெண் நண்பகர்கள் பங்கு பெற்றும் விருந்துபசார நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு மதுபானமும் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக பல கொண்டாட்டங்களுடன் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது மதுபானம் நிறைவடைந்து விட்டதால் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்கள் மாற்று யோசனையை முன்வைத்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றினை ஒழிக்க பயன்படுத்தப்படும் தொற்று நீக்கும் மருந்து திரவத்தை குடிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

69 வீதம் எத்தனோல் செறிவு காணப்படுவதை அறிந்த அனைவரும் அதனை பருகியுள்ளனர்.

பருகி சில மணித்தியாலங்களில் அனைவரும் மயக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.

அவசரமாக அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும் தொற்று நீக்கியை பருகிய 27,28,32,59, மற்றும் 62 வயது பிரிவுகளை கொண்ட 5 ஆண்களும் 41 வயதுடைய ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரு பெண்கள் மீளா மயக்க நிலையான கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு