கொரோனா சோதனையால் சீனாவின் குழப்பம்!! -உழியர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்-

ஆசிரியர் - Editor II
கொரோனா சோதனையால் சீனாவின் குழப்பம்!! -உழியர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்-

சீனா நாட்டில் உள்ள ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் ஒட்டு மொத்த பயணிகளும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் தரைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் வீடியோவாக  வெளியாகியுள்ளது.மேலும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதால், பயணிகள் கூட்டம் தங்களை விடுவிக்குமாறு கோஷமிட்டனர்.

அது மட்டுமின்றி, விமான நிலையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சில பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனிடையே உள்ளூர் பத்திரிகைகள் சில, இந்த  சம்பவத்திற்கு பிறகு, ஊழியர்களை மட்டுமே கொரோனா சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், சீனாவில் அமலில் இருக்கும் புதிய சட்டத்தின்படி, விமான பயணிகளும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாங்காய் பகுதியில் நீண்ட 11 நாட்களுக்கு பின்னர் 39 வயதான நபரும் அவரது 34 வயது மனைவியும் கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில்அவர்கள் தொடர்பில் சுகாதார ஊழியர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு