பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளரின முக்கிய அறிவித்தல்

ஆசிரியர் - Editor IV
பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளரின முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ,25 திகதிகளில் மக்கள் நலன் கருதி  சந்திப்பு நடைபெறும் என பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை    இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும்  கருணா அம்மான் அறிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை கொண்ட எமது மக்கள் சிரமப்படுவதை  தான் அவதானித்துள்ளதுடன் அவ்விடயங்களை உடனடியாக நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமயவிவகார கலாசாரஅலுவல்கள்அமைச்சருமான மஹிந்தராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மக்கள் சந்திப்பிற்காக திறக்கப்பட்டிருப்பதுடன் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி  சகல மக்களும் சந்தித்து குறைநிறைகளை கூறி தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு