கிளி.கண்டாவளை- தருமபுரம் 3ம் யூனிட் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று..! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இலங்கையில் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை. 

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தொற்றுக்குள்ளான 3 போில் ஒருவர் கிளிநொச்சி கண்டாவளை - தர்மபுரம் 3ம் யுனிட் பகுதியை சேர்ந்தவர். என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கொழும்பிலிருந்து கடந்த 25ம் திகதி வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். 

மேலும் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு