மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!! -இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor III

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் குறித்த தீ விபத்தில் 200க்கும் அதிகமான நோயாளிகள் தீ விபத்துல் இருந்து மீட்கப்பட்டு வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

வைத்தியசாலை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ கொளுந்துவிட்டு எரிந்து புகைமூட்டமாக காட்சியளித்தது. தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லாரோ போடோ கூறியதாவது:-

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள வைத்தியசாலை கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் சக்கர நாற்காலிகளிலும் ஊன்றுகோல்கள் உதவியுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்த 2 நோயாளிகள் 42 வயது மற்றும் 82 வயது மதிக்கத்தகவர்கள் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு